திருக்குறள்

39.

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல.

திருக்குறள் 39

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல.

பொருள்:

தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.

மு.வரததாசனார் உரை:

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

சாலமன் பாப்பையா உரை:

அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா